உடல் வலியை போக்கும் மூலிகை பணம் - எப்படி செய்வது?
how to make moolikai tea
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். அனால், தற்போதைய காலகட்டத்தில் நோயில்லாத மனிதர்களே இல்லை. அதனால், உடல் ஆரோக்கியமாக இருக்க பலரும் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், மூலிகை பணம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :-
கொத்தமல்லி விதை
சீரகம்
ஓமம்
பட்டை
செய்முறை :-
* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொத்தமல்லி விதை, சீரகம், பட்டை மற்றும் ஓமத்தை ஒரு நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.
இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
* இதையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதில் அரைத்த பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு கொதிக்க விட்டு பருகவும்.
* தினமும் காலையில், டீ, காபிக்கு பதில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சளி, இருமல், காய்ச்சல், கை கால் வலி, முழங்கால் மூட்டு வலி உள்ளிட்டவை முழுமையாக குணமாகும்.