தம்பியின் திருமணத்தில் கலந்துகொள்ளாத சிம்பு.! அதிருப்தியில் டி.ஆர் குடும்பத்தார்கள்!! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் டி.ராஜேந்தர். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், என பன்முக திறமைகளை கொண்டு விளங்கினார். இவருக்கு சிலம்பரசன்,குறளரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன், பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல பாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

 இந்நிலையில் தங்களது பெற்றோரின் ஆசியோடு சமீபத்தில் குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். அதனைத் தொடர்ந்து அவர் இஸ்லாமியப் பெண் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தது. மேலும் டி.ராஜேந்தர் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் தனது இளைய மகன் குறளரசனின்  திருமண பத்திரிக்கையை அளித்து வந்தார்.

இந்நிலையில் குறளரசன் மற்றும் நபீல் அஹமத் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் நடிகர் சிம்பு  கடந்த சில வாரங்களாக தனது அடுத்த படத்திற்காக உடலைக் குறைப்பதற்காக வெளிநாட்டில் உள்ளார். அதனால் அவர் தனது தம்பி  குறளரசன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை .இதன் காரணமாக சிம்புவின் குடும்பத்தார்கள் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளது. 

மேலும் குறளரசன்- நபீல் அஹமத்  திருமண வரவேற்பு வரும்  29ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sibu not participate in kuralarasan marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->