மீண்டும் போர்களமாகும் நித்யா - தாடி பாலாஜி பிரச்சனை.! பிக்பாஸ் சீசன்-2 யில் சேர்த்து வைத்தாலும் இதுதான் நிலையா?.!! பிக்பாஸ் சீசன்-3.!!
bigg boss famous thadi balaji and nithya family problem once again started
நகைச்சுவை நடிகராக இருக்கும் தாடி பாலாஜி பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் நித்யா (வயது 31)., இவர்கள் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
தாடி பாலாஜியின் மனைவியான நித்யா தனது மகளுடன் சென்னை மாதவரத்திற்கு அருகில் இருக்கும் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு., கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நித்யா தனது கணவர் மீது புகார் அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நித்யா மற்றும் தாடி பாலாஜிஇடம்., சக நடிகர்கள் அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழ கூறி அறிவுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவுக்குப் பின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில்., தற்போது நித்யா மீண்டும் கணவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் பாலாஜி தனது இல்லத்திற்கு மதுபோதையில் வந்து கலாட்டா செய்வதாகவும்., கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி என்று வீட்டின் ஜன்னல் கதவுகளைஉடைத்து., செல்போன் ஆபாசமாக திட்டியும்., கொலை மிரட்டல் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீதிமன்றத்தில் நிலுவை இருக்கும் விவாகரத்து வழக்கை குறிப்பிட்டு அதன் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும் படி புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்று காவல்துறையினர் அதற்கான ரசீதை வழங்கி தாடி பாலாஜியை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். தற்போது தாடி பாலாஜி திரைத்துறை படப்பிடிப்பு காரணமாக வெளியூரில் இருப்பதால்., இரண்டு நாட்களில் சென்னை வந்தவுடன் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
bigg boss famous thadi balaji and nithya family problem once again started