சீரியலை விட்டு விலகும் கோபி.?! பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் 08.30 மணி முதல் 9 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும். 

இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலில் இருந்து தற்போது செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆரியன் விலகியுள்ளார். சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். 

கதாநாயகியாக சுசித்ரா ஷெட்டி பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் ராதிகாவை கரம் பிடிக்க முயற்சித்து வந்த நிலையில், இவை அனைத்தும் பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. 

இதனால், அவர் வீட்டை விட்டு பாக்கியா வெளியேறி தனது ஆபிஸில் தங்கி வரும் நிலையில், தற்போது கோபியை விவாகரத்து செய்வதற்காக பாக்கியா கோர்ட்க்கு செல்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்திய ப்ரோமோ வீடீயோவில் கோர்ட் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்க சம்மதித்துள்ளது.

என்னதான் சீரியல் என்றாலும் மக்கள் இதனை உணர்வுபூர்வமாக கருதுகின்றனர். இதில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், "கோபி கதாபாத்திரம் வேறு நான் வேறு என்பதை புரிந்து கொள்ளாமல் மக்கள் என்னை படுமோசமாக திட்டுகின்றனர். எனக்கு சாபம் கொடுக்கின்றனர். இதை பார்க்கும் பொழுது மிகவும் மனசு கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் இந்த சீரியலை விட்டு போய்விடலாம் என்று கூட தோன்றுகிறது." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bakyalakshmi sathish may leave From serial


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->