தனது பிறப்புறுப்பை பெரிதாக்க ஆசைப்பட்டு விபரீத முயற்சி செய்த இளைஞர் | தீயணைப்புத்துறை வரை சென்ற சம்பவம்! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டில் இளைஞர் ஒருவர் தனது பிறப்புறுப்பை பெரிதாக ஆசைப்பட்டு விபரீத முயற்சி செய்ய, அது தீயணைப்புத்துறை வரை சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தாய்லாந்த் நாட்டைச் சேர்ந்த வாலிபர், தனது பிறப்புறப்பின் அளவு பெரிதாக மாற்ற உலோகத்தாலான வளையம் ஒன்றை மாட்டியிருக்கிறார். சுமார் 4 மாதங்களாக அந்த வளையம் அவரின் பிறப்புறுப்பில் மாட்டியதால், அது அங்கயே சிக்கி கொண்டுள்ளது.

இதனையடுத்து அந்த வளையத்தை எடுக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்களின் முயற்சி தோல்வியடைவே, தீயணைப்புத்துறையை வரவழைத்து பவர் டூல்கள் மற்றும் வெல்டிங் கட்டர்களை கொண்டு பிறப்புறுப்பில் சிக்கிய உலோக வளையத்தை வெட்டி எடுத்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ ஊடகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இந்த பணியை செய்து முடிக்க ஒரு மணிநேரம் ஆகியதாவும், அந்த வாலிபர் இந்த வளையம் தனது பிறப்புறுப்பை பெரிதாக்கும் என்று நம்பித்தான் இதனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த வாலிபரின் பிறப்புறுப்பில் ரத்த ஓட்டம் சரியாக செல்லாததால், அந்த இடத்தில் வீக்கமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viral news for Thailand young man


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->