கிரீஸ் நாட்டில் விபத்துக்குள்ளான உக்ரைன் நாட்டு சரக்கு விமானம்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் கிரீஸ் நாட்டில் விபத்திற்குள்ளானது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் ஏஎன்-12 செர்பியாவில் இருந்து புறப்பட்டு ஜோர்டான் நோக்கி செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.

விமானத்தின் என்ஜின்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள கவலா விமான நிலையத்தில் தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும் விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவு முன்பே கிரீஸ் நாட்டின் வடக்கே ஏஎன்-12 உக்ரைன் நாட்டு சரக்கு விமானம் கட்டுப்பட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்திற்கு முன் பெரும் தீ மற்றும் புகை மூட்டத்தை கண்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மேலும் விமானத்தில் 8 பேர் இருந்ததாகவும், அதில் 12 டன் எடையுள்ள ஆபத்தான பொருட்கள், பெரும்பாலும் வெடிபொருட்கள் இருந்ததாகவும் கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine cargo aircraft crashes in greece


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->