ரயிலில் கூட்ட நெரிசலில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டோம்பிவ்லி மற்றும் கோபார் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ளூர் ரயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிப்பது வழக்கமாக நடக்கும். அந்த வகையில் கிழக்கு டோம்பிவ்லி இருக்கும் போப்பர் காயான் பகுதியைச் சேர்ந்தவர் சார்மி பிசாத். 

இவர் தனது அண்ணன் மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில்  சார்மி பிசாத் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்திருக்கிறார். தலை மற்றும் முதுகில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக டோம்பிவ்லியில் இருக்கும் சாஸ்திரி நகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள், விபத்தில் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தனர். இதுகுறித்து கூறும் சக பயணிகள், சார்மி பிசாத் படியில் நின்று பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் பிடிகொடுத்து நிற்க முடியவில்லை. இதனால் அவர் தவறி விழுந்தார் என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train accident in maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->