திமோரில் குலுங்கிய கட்டிடங்கள்: பீதியில் மக்கள்!
Timor Earthquake
திமோர் பகுதியில் இன்று காலை 4. 49 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.