இயற்கையின் சீற்றத்தால் தென்னாபிரிக்காவில் பெய்த கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் மாகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழை காரணமாக அந்த நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் அந்த நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பல வீடுகள் சேதம் அடைந்து சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர்.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், மாயமான பலரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SouthAfrica flood people death increased


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->