எல்லையில் பதற்றம்.! 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியா.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவதை கண்டித்து வடகொரியா தனது எல்லைப் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் ஜப்பான் எல்லையில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை எல்லைப் பகுதியில் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா 8 போர் விமானங்களையும், 4 குண்டு வெடிப்பு நிகழ்த்தும் விமானங்களையும் எல்லைப் பகுதி அருகே அனுப்பியுள்ளது. 

இதையடுத்து வடகொரியா விமானங்கள் வானிலிருந்து தரைப்பகுதியை தாக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக 30 போர் விமானங்களை எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியாவின் அச்சுறுத்தல்களையும், தூண்டுதல்களை சமாளிக்கவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Korea send 30 warplanes to border to tackle north Korea warplanes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->