படம் மட்டும் இல்ல, நாங்க பணமும் எடுப்போம், ஏடிஎம் மையத்தில் பாம்பு செய்த அடாவடி.! - Seithipunal
Seithipunal


பொதுவாக பாம்பு என்றால் படமெடுப்பது வழக்கம். ஆனால் ஆஸ்திரலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் பாம்பு ஒன்று ஏடிஎம் மையத்தில் இருந்ததை கண்டு, பாம்பு பணம் எடுக்க வந்துள்ளதோ என மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆஸ்திரலியாவின் டயான் மான்செல் என்ற பெண் ஒருவர் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  ஏடிஎம் மையத்திலிருந்த இயந்திரத்தின் மீது வாயை பிளந்தபடி சீற்றத்துடன் பெரிய மலை பாம்பு ஒன்று இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் பணம் எடுக்கும் முடிவை கைவிட்டு, ஏடிஎம் மையத்திற்கு அருகிலிருந்தவர்களிடம் பாம்பு இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். பின் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

பாம்பு பிடிப்பவர்கள் வருவதற்குள்ளாக ஏடிஎம் மையத்தின் முன் கூடிய போது மக்கள், தங்களது மொபைலில் மலை பாம்பு உள்ளதை தங்களது செல்போனில் படம் பிடிக்க துவங்கினர். பொதுமக்கள் சூழ்ந்ததை பார்த்து மலைபாம்பு மேலும் சீற்றமடைந்து. அதற்குள் அவரவர் தங்களது சமூகவலைதள பக்கத்தில் சம்பவம் குறித்து போட்டோ மற்றும் வீடியோவுடன் பகிர்ந்தனர்.

வன பகுதி அருகே உள்ள கிராமங்களில் மலைபாம்பை பார்ப்பது சாதாரணம். ஆனால் நகர் பகுதியில் பெரிய மலை பாம்பை கண்டதும் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake in australia atm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->