ஆசையாக வளர்ந்த மலை பாம்புகள்..! பாம்புடன் காரில் சென்ற போது நேர்ந்த சோகம்.!
snake grown up by america trainer
அமெரிக்காவைச் சேர்ந்த கண்டி என்பவர் பாம்புகளின் மீது அதிக ஆர்வம் கொண்டு தன்னுடைய வீட்டில் மலைப்பாம்புகளை வளர்ந்து வந்துள்ளார். அந்தப் பாம்புகளை வைத்து இனப்பெருக்கம் செய்து அவற்றை விற்பனை செய்து தொழில் புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை பிரபல நூலகம் ஒன்றுக்கு தன்னிடம் இருக்கும் பாம்புகள் குறித்து விளக்கமளிக்க பையில் எடுத்து போட்டுக்கொண்டு காரில் சென்றுள்ளார். அப்பொழுது பாம்புகளை காரில் வைத்துவிட்டு நூலகத்திற்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது அவருக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது.
காரில் வைத்திருந்த பாம்புகள் அனைத்தும் காணாமல் போய் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த கண்டி தன்னுடைய பாம்புகளை யாரோ திருடி விட்டனர். எனவே பாம்பின் நிறம், பெயர் இவற்றை கூறி பாம்பை பார்த்தவர்கள் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருக்கும் வீடியோ காட்சிகளை வைத்து திருடனை பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.
English Summary
snake grown up by america trainer