ஆளுங்கட்சிக்கு எதிராக திரண்ட மக்கள்.! அரசை கவிழ்க்க வெடித்த போராட்டம்.! - Seithipunal
Seithipunal


சிலி நாட்டின் தலைநகரமான சாண்டியாகோவில் என்று இடத்தில், பல்பொருள் அங்காடிக்கு வன்முறையாளர்கள் தீவைத்ததில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்கள் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமானோர் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை வந்தது.

மேலும், சாண்டியாகோ உள்ளிட்ட சிலியின் நகரங்கள் கடந்த சில நாட்களாக கடும் வன்முறைகளை கண்டு வருகிறது. கார்கள், கடைகள் தீக்கிரையாக்கப் பட்டது. ஆங்காங்கே வன்முறை கும்பல்கள் பொதுச் சொத்துகளை சூறையாட பட்டது. போக்குவரத்து கட்டணத்திற்கு எதிரான போராட்டம் ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டமாக வெடித்திருக்கிறது. 

இதே போல லெபனானிலும் ஊழல் மற்றும் பொருளாதார சீர்கேட்டுக்கு காரணமான ஆள்வோருக்கு எதிராக மக்கள் பெருந்திரளாக திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். லெபனான் கொடிகளுடன் கடல்போல் திரண்ட மக்கள் கூட்டம் அரசுக்கு எதிரான முழக்கத்தை எழுப்பி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பெய்ரூட் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் காரணமாக முழு அடைப்பு காணப்பட்டது. மக்கள் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people against to government in chile country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->