பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது வழக்குப் பதிவு.. கைது செய்யப்படுவாரா.? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத திருமணத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து ஷபாஷ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஷபாஷ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஷபாஷ் ஷெரீப்பை 'துரோகி' 'திருடர்' என கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan ex prime minister imran against case filed


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->