பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உருமாறிய கொரோனா பி.எஃப்-7 சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனைகளும் வேகமாக நிரம்பி வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்த இந்தியா, தென் கொரியா, இத்தாலி, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சீனாவிற்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு, பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இதேபோல் ஸ்பெயினும், சீனாவில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order to conduct corona test for Chinese travelers in France and Spain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->