அல்கொய்தா தலைவர் படுகொலை: அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் தலைமைக்கு ஒபாமா பாராட்டு
Obama praises US President for leadership for assassination
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தாவின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் சீல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பின் லேடனின் மறைவுக்கு பின்பு இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில், மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அதிபர் ஜோ பைடன் தலைமைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் "செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்" என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Obama praises US President for leadership for assassination