அதிரடி முடிவெடுத்த அசெஞ்சர்.! பீதியில் ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, வருவாய் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகநூல், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பணியாளர்களை குறைத்து கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், பொருளாதார சூழல் காரணமாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அசெஞ்சர் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து அசெஞ்சர் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, "ஆண்டு வருவாய் மற்றும் லாபம் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளதால், மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம், அதாவது 19,000 ஊழியர்களை குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

அசெஞ்சர் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் வளர்ச்சியானது, எட்டு சதவீதம் முதல் பத்து சதவீதம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இது முந்தைய கணிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று குறைவு தான்.

இதே போன்று பங்கு ஆதாயம், ஒரு பங்கிற்கு 11.20 டாலர் முதல் 11.52 டாலர் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 10.84 டாலர் முதல் 11.06 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nineteen thousand employees dismiss in accenture company


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->