எங்களுக்கு நியாயம் கெடச்சாவனும்... திருமண மண்டபத்தில் மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் காதலிகள்.! - Seithipunal
Seithipunal


சீனா நாட்டின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த ஆறாம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது சில இளம் பெண்கள் கையில் பேனருடன் மண்டபத்தின் வாசலில் கோஷம் எழுப்பி கொண்டு இருந்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த பெண்களிடம் விசாரணை செய்தனர். அதற்கு அந்த பெண்கள் "பெண்களை ஏமாற்றாதீர்கள். அவர்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களை பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலமை என்னாகும்" என்று கோஷங்களை எழுப்பிய வண்ணம் நின்றனர். 

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலி என்பது தெரிய வந்தது. இதைத்ய் தொடர்ந்து, சென்னும் அவரது வருங்கால மனைவியும் மண்டபத்தின் வெளியே கோஷங்களை எழுப்பிய முன்னாள் காதலிகளுடன் தகராறில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, சென் தெரிவித்ததாவது, "பெண்களின் எதிர்ப்பால் தான் கோபப்படவில்லை. கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் இருந்தேன். இதனால் பல பெண்களை காயப்படுத்தினேன்" என்றுத் தெரிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near china ex girl friends strike with banner in boy friend marriage


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->