தலைகீழாக தூக்கியடித்து, மூளையை வைத்து சமையல்.! இளைஞர் அதிர்ச்சி வாக்குமூலம்.!  - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் 21 வயது இளைஞர் ஒருவரின் வீட்டிற்கு அருகே பெண் உடை அணிந்த உடல் பகுதிகள் சிதறிய வண்ணம் கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். 

அப்போது விசாரணை நடத்தியதில், அந்தப் பெண்ணின் மூளையை அரிசியுடன் வைத்து சமைத்ததாக அந்த இளைஞர் தெரிவித்திருக்கின்றார். இளைஞர் குடித்துவிட்டு பசியுடன் இருந்த நேரத்தில் அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசியதால், அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து அந்த பெண்ணை அவர் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

வேலை ஏதும் இல்லாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் தற்போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அங்கிருந்த பகுதியினரை விசாரித்ததில் வீட்டிற்கு அருகில் ஆங்காங்கே உடல் சிதறி கிடந்தது, மேலும் தலையை தனியாக எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று அங்கே மூளையை எடுத்து சமைத்து விட்டு மண்டையோட்டை வீட்டிற்கு அருகிலிருக்கும் குழியில் போட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MURDER IN PHILIPAINS


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->