ஆழ்ந்த சோகத்தில் வாடும் உறவினர்கள்.! நேபாள விமான விபத்தில் மாயமானவர்களின் உடல்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில்  காணாமல் போன விமானத்தில் பயணித்த அனைவரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேபாளம் பொக்காராவில் இருந்து நேற்று முன்தினம் காலை 9.55 மணிக்கு ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் திடீரென மையமானது.

இந்த விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த நிலையில் முஸ்ட்ங் மாகாணம் தசாங்-2 பகுதியில் சனோஸ்வர் என்ற இடத்தில் உள்ள மலையில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விமானத்தில் பயணித்த 21 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இந்நிலையில் விமான விபத்தில் உறவுகளை இழந்த உறவினர்கள் ஆழ்ந்த சோகத்தில் வாடியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing plane all passengers found in Nepal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->