அதிரும் உலக நாடுகள்.. துருக்கி, சிரியா, இந்தியாவை தொடர்ந்து ஆப்கானில் நிலநடுக்கம்..!! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி இதுவரை 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் 4.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக துருக்கியில் இன்று மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.7 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானிலும் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6:47 மணியளவில் பியாசாபாத் நகரின் வடகிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.3 என பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்களங்களால் மக்கள் நீதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mild earthquake in Afghanistan today morning


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->