தீவிரவாதி யார் தெரியுமா? வேதனையால் கொந்தளித்து பிரபல கிரிக்கெட் வீரர் வெளியிட்ட தகவல்!!
mahela jayavarthane tweet about srilanka issue
உலகம் முழுவதும் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடினார்கள். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள கொழும்பு கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்திலும் நீர்கொழும்புவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திலும் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது. அப்பொழுது அங்கு திடீர் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் கொழும்பு நகரில் தி ஷாங்கரிலா, சின்னமன் கிராண்ட், தி கிங்க்ஸ் பெரி ஆகிய 3 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் குண்டுகள் வெடித்தன.
அதில் இதுவரை 300 க்கும் அதிகமான பேர் பலியானர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகையே அதிர வைத்த இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழலே நீடித்து வருகிறது. சமீபத்தில் இலங்கையில் இஸ்லாமியர்களின் நிர்வாகநிலையங்கள் மற்றும் மசூதிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கப்பட்டன.
இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்தனே தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசியல் நோக்கம் கொண்ட எந்த விஷயத்திலும் நாம் சிக்கி கொள்ளக்கூடாது, நாடு வீழவேண்டும் என நாட்டில் வன்முறையை உருவாக்குபவர்கள் அனைவரும் தீவிரவாதி தான் என பதிவிட்டுள்ளார்.
English Summary
mahela jayavarthane tweet about srilanka issue