உருக்குலைந்த ஜப்பான் - பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


தீவு நாடான ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

சுமார் மூன்று மணி நேரத்தில் 30 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா உள்ளிட்ட பகுதிகளில் 1 முதல் 5 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

புத்தாண்டு தினத்தில் ஜப்பானை உலுக்கிய இந்த பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைகளால் 8 பேர் பலியானதாகவும், 30 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தேவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 300க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan earthquake death troll increase 62


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->