கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் பிளானுடன் வடகொரியா.. ஷாக் பதில் சொன்ன ஜப்பான்.!
Japan feeling worry about North Korea Missile Testing
வடகொரியாவில் ஆட்சி செய்து வருகின்ற தொழிலதிபர் கட்சியின் 75 ஆவது வருட விழா சனிக்கிழமை கொண்டாடி முடிக்கப்பட்டது. இதனையடுத்து வடகொரியாவின் தலைநகரான பியங்கியாங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பின் போது மிகப்பெரிய அதிசக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணையினை வடகொரியா அறிமுகம் செய்தது. இந்த விஷயம் ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அதன் தாக்குதலுக்கு பதில் சொல்லும் வகையில் ஏவுகணை தடுப்பு திறனை வலுப்படுத்த ஜப்பானும் உறுதி எடுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவலை ஜப்பான் நாட்டின் அமைச்சரவை தலைமை செயலாளர் கட்ஸுநோபு கட்கோ தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Japan feeling worry about North Korea Missile Testing