ஈரானில் அமெரிக்கா தாக்கிய அதே அணுசக்தி நிலையத்தை மீண்டும் தாக்கிய இஸ்ரேல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா தாக்குதல் நடத்திய ஈரானின் அணுசக்தி நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் நாடுகள் இடையே தொடர்ந்து 11 நாளாக நீடித்து வரும் போரில் அதில், அமெரிக்காவும் நுழைந்துள்ளது. இருநாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த சூழலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான போர்டோ மீது மீண்டும் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியுள்ளது. குறித்த அணுசக்தி நிலையமானது பூமிக்கடியில் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த தாக்குதலின் போது ஏற்பட்ட சேத விபரங்களை வெளியிடப்படவில்லை. இந்த செறிவூட்டப்பட்ட அணுசக்தி நிலையம் மீது சில நாட்கள் முன்பு அமெரிக்காவும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

போர்டோ அணுசக்தி நிலையம் மட்டுமல்லாது, தலைநகரில் உள்ள பிரபல ஈவின் சிறைச்சாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுதவிர, அங்குள்ள பாதுகாப்பு நிலைகளையும் குண்டுகள் வீசி தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel strikes again at same nuclear facility in Iran that US attacked


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->