கொரோனாவில் இருந்து தப்பிக்க, சிறைகைதிகள் மொத்தமாய் செய்த காரியம்.! உண்டான உச்சகட்ட பரபரப்பு.!
Iran jail protection about corona virus
ஈரான் நாட்டில் குர்திஸ்தான் மாகாண சிறையில் இருந்து 80 கைதிகளுக்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் நாடும் ஒன்று. இங்கே மொத்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து எட்டி இருக்கின்றது.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பதால் அங்கே கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி ஒரு நகரிலிருந்த சிறைச்சாலையில் என்பது கைதிகள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
மேலும் சிலர் சிறையை உடைத்து அங்கிருந்து தப்பி ஓடி இருந்தது, மாநில ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
சிறைச்சாலைக்குள் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஏற்கனவே நீதித்துறை 85 ஆயிரம் கைதிகளை விடுவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Iran jail protection about corona virus