நடுக்கடலில் பற்றி எரியும் தீ.. சிக்கிய இந்திய எண்ணெய் கப்பல்..!! - Seithipunal
Seithipunal


இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில், இந்திய எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர இலங்கை கடற்படை இரண்டு கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. 

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் தி நியூ டைமண்ட் என்ற கப்பல், குவைத் நாட்டிலிருந்து எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் பாரதிப் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

இந்த கப்பலில் 2 லட்சத்து 70 ஆயிரம் டன் எண்ணெய் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையின் கிழக்குக் கடற்பகுதியில் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருக்கையில், இன்று 7:45 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. 

இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் விமானங்களை மீட்பு பணிக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் ராஜபக்சே உறுதி செய்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Oil Ship fire in Near Srilanka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->