மரக்கட்டிடம் முழுவதும் தீ.. உயிருக்காக அலறிய 11 பேர்.. உடல் கருகி கட்டையாக மீட்கப்பட்ட சோகம்.!!
in Russia wooden house fire accident 11 peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் நடைபெறுவதாகவும், இந்த விபத்துகளில் சிக்கி பலரும் உயிரிழந்து வருவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், ரஷிய நாட்டில் உள்ள டாமஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரிச்சுளிம்ஸ்கி கிராமத்தில் இருக்கும் மரக்கட்டிடம் அதிகாலை நேரத்தில் தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மரக்கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அப்பகுதி வாசிகள், இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அக்கட்டிடம் முழுவதுமாக மரத்தினால் கட்டப்பட்டுள்ள காரணத்தால், தீ மளமளவென பரவியுள்ளது. கட்டிடத்தில் இருந்து அலறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில், தீயணைப்பு படையினரின் நீண்ட முயற்சிக்கு பின்னர் இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், கட்டிடத்தில் இருந்த 11 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்த நிலையில், இவர்களின் உடல் தீயில் முழுவதுமாக எரிந்து கரிக்கட்டையாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்திற்கான காரணம் ஏதும் தெரியவராத நிலையில், கட்டிடத்தில் இருந்தவர்கள் யார்? தீ எப்படி பற்றியது? என்பது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Russia wooden house fire accident 11 peoples died