டெங்கு காய்ச்சலால் உயரும் பலி எண்ணிக்கை..! ஐந்து வயது சிறுவன் பரிதாப பலி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்..!!
in puthuchery dengue fever child died
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் பகுதியை அடுத்துள்ள தமிழக பகுதியான இராயபுதுப்பக்கம் பெருமாள்கோவில் தெருவை சார்ந்தவர் சக்திவேல். இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கௌரி.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., தற்போது நான்கு வயதுடைய சாருமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில்., இவர்களின் பெண் குழந்தை கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்துள்ளது.
இவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., குழந்தை இறந்ததற்கு காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக புகார்கள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இதனைப்போன்றே அதே பகுதியை சார்ந்த ஐந்து வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்., சிறுவனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபகுதியை சார்ந்த சேகர் என்பவர் பெயிண்டராக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் செல்வி.
இவர்கள் இருவருக்கும் 5 வயதுடைய குகன் என்ற மகன் உள்ள நிலையில்., இரண்டு வயதுடைய பெண் குழந்தையும் உள்ளது. ஐந்து வயதுடைய குகன் அங்குள்ள ஒன்றாம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக திடீரென காய்ச்சலை அவதியுற்று வந்துள்ளார்.
இவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்., நேற்று குகனும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து பலியாகி வருவது., அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார துறையினர் சரிவர பணிகளை அப்பகுதியில் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in puthuchery dengue fever child died