பள்ளி வகுப்பறையிலேயே ஆசிரியையை கொலை செய்த தற்கொலை செய்த கொண்ட மாணவன்..!  - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டில் உள்ள ஹொவ்ஹீயலா மாகாணத்தில் இருக்கும் டோரியான் நகரில் தனியார் பள்ளிகூடமொன்று செயல்பட்டு வருகிறது. சின்ஹா பள்ளிக்கூடம் நேற்று வழக்கம் போல துவங்கியுள்ளது. 

இந்த சமயத்தில்., இப்பள்ளியை சார்ந்த 11 வயதாகும் மாணவன் கைகளில் துப்பாக்கியுடன் தனது வகுப்பறைக்குள் நுழைந்து., பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியையின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளான். 

இதனால் நிலைகுலைந்து போன ஆசிரியை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மாணவனின் செயல்பாடுகளை கண்ட சக மாணவ - மாணவிகள் பெரும் அச்சத்திற்கு மத்தியில் பீதிக்கு உள்ளாகியிருந்தனர். 

இவர்களை கண்ட மாணவன் பின்னர் மாணவர்களை நோக்கி சுட்டுக்கொண்டே இருந்துள்ளார். பள்ளி வகுப்புரையில் துப்பாக்கி சுடும் சத்தத்தினை கேட்டு அதிர்ச்சியடைந்த உடற்பயிற்சி ஆசிரியர் வகுப்பறைக்கு விரைந்துள்ளார். 

உடற்பயிற்சி ஆசிரியரையும் சுட்ட மாணவன் இறுதியாக தற்கொலை செய்துகொண்டுள்ளான். மாணவனின் துப்பாக்கி சூட்டில் வகுப்பு ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்த நிலையில்., உடற்கல்வி ஆசிரியர் உட்பட 5 மாணவர்கள் படுகாயமடைந்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in mexico teacher killed by student and attempt suicide


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->