ஈரானில் தவித்த இந்தியர்களை மீட்டு வரத்துவங்கிய இந்தியா..!!
in Iran struggled Indian rescued
சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ் சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும், ஈரான் மட்டும் தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஈரான் நாட்டில் இருவருக்கு கரோனா பரவியிருப்பது தெரியவந்த நிலையில், தற்போதுவரை சுமார் 611 பேர் ஈரானில் பலியாகியுள்ளனர். சீன நாட்டினை தவிர்த்து அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் முதல் நாடாக உள்ளது.
மேலும், தற்போது வரை ஈரான் நாட்டில் 12,739 பேர் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
தற்போது வரை ஈரானில் 611 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கொம் நகரில் இருந்து கரோனா பரவத்துவங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடித்தொழில் செய்து வரும் தமிழர்கள் தங்களை அழைத்து செல்ல மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியை சார்ந்த 800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கிஸ் தீவு, சின்கா தீவு போன்ற நான்கு தீவுகளில் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இவர்களை மீட்டு வர தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்ட நிலையில், ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த 234 இந்தியர்கள் தற்போது வரை தாயகம் திரும்பியுள்ளனர். தற்போது மாணவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் மட்டும் தாயகத்திற்கு திரும்பி அழைத்துவரப்பட்டுள்ள நிலையில், பிறரையும் அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
in Iran struggled Indian rescued