பிணத்துடன் சுற்றித்திரிந்த லாரி தொடர்பான விசாரணையில் பேரதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் நகர் கிழக்கு பகுதியில் இருக்கும் தேம்ஸ் நதிக்கரை அருகேயிருக்கும் வாட்டர்கிலேட் தொழிற்சாலை பகுதியானது உள்ளது. இந்த பகுதியில் காவல் துறையினர் வழக்கம் போல கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த தருணத்தில்., அங்கிருந்த லாரியானது சந்தேகிக்கும் வகையில் இருந்ததை அடுத்து., இந்த லாரியை காவல் துறையினர் சோதனை செய்ய முடிவு செய்து., சோதனை செய்துகொண்டு இருந்தனர். 

இந்த சமயத்தில்., லாரிக்கு உள்ளே 39 பிணங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., லாரியில் இருந்த ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில்., அங்குள்ள வடக்கு அயர்லாந்து பகுதியை சார்ந்த சுமார் 25 வயதுடைய இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்., லண்டன் நகருக்குள் பிணத்துடன் லாரி வந்ததை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் போது இவர்கள் அனைவரும் சீன நாட்டினை சார்ந்தவர்கள் என்பதும்., இவர்களில் ஒருவர் மட்டும் இளம் வயதுள்ள நபர் மற்றும் மீதமுள்ள அனைவரும் பெரியவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும்., கடந்த 2000 ஆம் வருடத்தின் போது இதனைப்போன்று இரகசியமாக குடியேறவந்த 58 சீனர்களின் உடலானது கண்டறியப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in England lorry with died body investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->