கனமழை தொடர்வெள்ளதால் காங்கோவில் பெரும் சோகம்.. பரிதாபமாக உயிரிழந்த மக்கள்.!!
in congo rain flood peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் அரங்கேறும் விபத்துகளால் பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். மனிதனால் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தால் ஒரு புறம் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதனைப்போன்று மனிதன் இயற்கையை அளித்ததற்கு தன் பங்கில் இருக்கும் பணியையும் இயற்கை செய்துகொண்டு தான் இருக்கிறது. இயற்கையை நமது தேவைக்காக எல்லையை மீறி அளித்து கொண்டு வருவதால் பருவநிலை மாற்றமானது தொடர்ந்து ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றின் காரணமாக கடுமையான மழை வெள்ளம்., புயல்., வறட்சி., கடுமையான வெயில் போன்றவை மக்களை வாட்டி வதைத்து., சில சமயங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறுகிறது.
இந்நிலையில்., காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில்., காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷான் நகரின் பல்வேறு பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்பு படையினர் விரைந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மீட்பு பணியில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணாமாக தற்போது வரை 41 பேர் பலியாகியுள்ளதாகவும்., சேதமான இடங்களில் இருக்கும் மக்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in congo rain flood peoples died