கட்டிட பணியின் போது பெரும் விபத்து..! 8 பேர் பரிதாப பலி.!!
in china construction site collapse workers died
இந்த உலகம் முழுவதிலும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துகளால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில்., கட்டிட பணிகளின் போது எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
சீன நாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குயாங் மாகாணத்தில் இருக்கும் குவான்ஷூ மாவட்டத்தின் நகரில் தரைத்தள வாகனங்கள் நிறுத்தும் பணியானது நடைபெற்று வந்தது. இந்த பணியில் சுமார் 14 ஊழியர்கள் ஈடுபட்டு வந்து கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில்., மாலை நேரத்தில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழவே., இந்த தகவலை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும்., இந்த விபத்தில் மூவர் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில்., ஒருவரை எவ்வித காயமும் இன்றி பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
மேலும்., மீதமுள்ள 10 ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில்., இன்று அதிகாலையில் எட்டு பேரின் உடல்களை அதிகாரிகள் மீட்டனர். மேலும்., இருவரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in china construction site collapse workers died