அதிகாலையில் நடந்த அதிபயங்கர விபத்து.! பேருந்தில் பற்றிய தீயில் சிக்கி 28 பேர் பரிதாப பலி., பலர் உயிருக்கு போராடிய நிலையில் அனுமதி.!!
in china bus fire accident 28 peoples died
சீனாவில் உள்ள ஹீனன் மாகாணத்தில் பேருந்து ஒன்று சுமார் 59 பயணிகளுடன் அங்குள்ள நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் பேருந்தில் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது.
பேருந்தில் தீ மளமளவென பற்றி எரிய துவங்கியதை அடுத்து., பேருந்தின் ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் பேருந்து முழுவதுமாக எரிய தொடங்கியது. பேருந்தில் இருந்த 28 பயணிகள் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் வெளியில் வந்து வீழ்ந்தனர்.
மீதமிருந்த 26 பயணிகள் பேருந்தின் உள்ளேயே தீக்கு இறையாகினர். இந்த விபத்தை கண்ட சக வாகன ஓட்டிகள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக உயிருக்கு போர்டையவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த 26 நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in china bus fire accident 28 peoples died