24 பள்ளி குழந்தைகளை கடத்தி சென்ற பிரிவினைவாதிகள்.. கண்ணீரில் பெற்றோர்கள்..!!
in cameroon country 24 students kidnapped army rescued safely
ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கேமரூன் நாட்டில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் ஆயுதம் ஏந்திய பிரிவினைவாதிகள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுதமேந்திய போராட்டத்தை துவக்கிய நபர்கள் சில நேரத்தில் அத்துமீறலில் ஈடுபடும் சோகமும் கொடூரமும் அரங்கேறி வரும் நிலையில், நேற்று அங்குள்ள ஆங்கில மொழி பேசும் மெமே பிராந்தியத்திற்கு உட்பட்ட கும்பா நகரப்பகுதியில் இருக்கும் பள்ளிக்குள் நுழைந்துள்ளார்.
இவர்கள் அங்கிருந்த சுமார் 24 குழந்தைகளை கடத்தி சென்றுள்ளனர். இது தொடர்பான தகவலை அறிந்த பெற்றோர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ள நிலையில், குழந்தைகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, குழந்தைகளை பிரிவினைவாதிகள் அங்குல காட்டுப்பகுதியில் கடத்தி வைத்துள்ளதாக தகவல் தெரியவந்ததை அடுத்து, காட்டுப்பகுதியில் அதிரடியாக நுழைந்த இராணுவத்தினர் பேச்சு வார்த்தைக்கு அழைத்த நேரத்தில், பிரிவினைவாதிகள் ஆயுத போராட்டத்திற்கு தயாராகி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நீடித்த நிலையில், இந்த சண்டையின் முடிவில் 2 பிரிவினைவாதிகள் கொலை செய்யப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, பெற்றோர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cameroon country 24 students kidnapped army rescued safely