தறிகெட்டு இயங்கி எதிர்திசையில் பயணம் செய்த பேருந்து.. 11 பேர் துடிதுடித்து பலியான பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் உள்ள வடமேற்கு பகுதியில் இருக்கும் பாஹியா மாகாணத்தில் உள்ள தலைநகரான சால்வடாரில் இருக்கும் நகருக்கு பேருந்து புறப்பட்டு சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த பேருந்தில் சுமார் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், இப்பேருந்து பிராபோறோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர். 

இந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்குள்ள தடுப்புசுவரை உடைத்து எதிர்திசையில் பயணம் செய்து சரக்கு லாரியின் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில் இரண்டு வாகனமும் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக காயமடைந்தவர்களை மீட்டு அனுமதி செய்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Brazil bus truck accident 11 peoples died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->