19 பேரின் உயிரை பரிதாபக ருசிகண்ட கொடூரம்.!! துயரத்திலும் நடந்த அதிர்ஷ்டம்.!!  - Seithipunal
Seithipunal


 

ஆப்ரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில் இருக்கும் பெரும்பாலான சாலைகள் தரமற்று உள்ளது. அவ்வாறு இருக்கும் சாலைகளை பராமரிக்காததன் காரணமாக அந்த நாட்டில் அடிக்கடி வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.

அந்த வகையில்., இன்று உகாண்டா நாட்டில் இருக்கும் கப்ச்சோர்வா மாவட்டத்தில் உள்ள கப்ச்சோர்வா நகரில் இருந்து பேல் நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பயணம் செய்து கொண்டு இருந்தது. 

அப்போது குண்டும் குழியுமான சாலையில் பயணித்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பேருந்து அருகில் இருந்த மலை முகட்டில் கவிழ்ந்தது.  

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில்., பேருந்தில் பயணம் செய்த 19 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்., இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் தப்பிய 6 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN AFRICA PASSENGER BUS ACCIDENT IN HILLSIDE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->