பாகிஸ்தானியர்களுக்கு இம்ரான்கான் வைத்த திடீர் வேண்டுகோள்..! இது தான் காரணமா.? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானிய மக்கள் யாரும் காஷ்மீர் செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்., 

"இந்திய அரசு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதுடன், 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் முடிவையும் திரும்பப்பெறாவிட்டால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் இதுவரை இல்லாத அளவு மிகவும் உறுதியுடன் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துவைப்பேன். 

பாகிஸ்தானில் இருந்து யாராவது ஜிகாத் போராட்டத்துக்காக காஷ்மீருக்கு சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கும் முதல் நபராக நான் ஆகிவிடுவேன். அதோடு காஷ்மீர் மக்களின் எதிரியாகவும் நான் கருதப்படுவேன். காஷ்மீர் மக்களை படைகளால் முற்றுகையிட்டு தாக்குவதற்காக இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் ", என்று தெரிவித்திருந்தார்.

இம்ரான்கான் அமெரிக்கா சென்று டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவும் உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran khan to pakistan people


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->