கணவனோடு சேர்ந்து உயிரை விட்ட மனைவி.! கண்ணிமைக்கும் நேரத்தில் பரிதாபம்.!
husband and wife death in sri lanka
இலங்கையில் தொடங்கொட காவல் பிரிவில் வசித்து வரும் தம்பதியினர் மின்சாரம் தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர்.
இலங்கையில் தொடங்கொட காவல் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்கல, நேஹின்ன பிரதேசத்தில் வயதில் மூத்த தம்பதியினர் தனியே வசித்து வந்துள்ளனர். அவர்கள் வசித்த வீட்டில் தான் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சட்டவிரோத அவர்கள் மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. காவல்துரையின் ஊடகப் பிரிவு இதுகுறித்து "அதேயிடத்தைச் சேர்ந்த 68 வயதுடைய கணவனும், அவருடைய 63 வயதுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கணவனும், மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அவர்கள் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக தெரிகிறது.
English Summary
husband and wife death in sri lanka