பெற்ற தாயை கூலிப்படையை ஏவி கொலை செய்த மகள்.! காதலனோடு கைதான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பெற்ற தாயை கூலிப்படையை ஏவி கொலை செய்த மகள்.! கதலனோடு கைதான சம்பவம்.! 

ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர் அனஸ்டாசியா மிலோஸ்கயா. கணவரை பிரிந்து வாழும் இவருக்கு, பதினான்கு வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட நிலையில் குப்பைகள் சேகரிக்கும் இடத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

இந்த சடலத்தை கைப்பற்றிய போலீஸார், அந்த நபர் அணிந்திருந்த ஆடையை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட நபர் அனஸ்டாசியா மிலோஸ்கயா என்பது உறுதியானது. 

இதையடுத்து போலீசார் அனஸ்டாசியா மிலோஸ்கயாவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கி கொலை செய்ததாக, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, போலீசாருக்கு அனஸ்டாசியா மிலோஸ்கயாவின் மகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கண்காணிக்க ஆரம்பித்தனர். 

அப்போது, அனஸ்டாசியா மிலோஸ்கயாவின் மகளே கூலிப்படையை நியமித்து பெற்ற தாயை கொன்றதும் சிறுமிக்கு துணையாக இருந்ததாக அவளது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், அவர் குற்றைத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், போலீசார் அவர்களிடம் விசாரணை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl arrested for kill mother in russia


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->