குழந்தையுடன் 9 ஆவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி கடிதம்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா நாட்டில் மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் கணவன் மனமுடைந்து இருக்கிறார், இரு குழந்தைகளோடு 9-வது மாடியில் இருந்து குதித்து இறந்திருக்கிறார்.

சரதோவ் நகரில் வசித்து வந்த ரோமன் மின்காய்லோவ்- ஐரினா இருவருக்கும், சோஃபியா என்னும் 4 வயது பெண் குழந்தையும், ஆர்யோம் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்தார்கள். ரயில்வேயில் வேலைபார்த்து வந்த ரோமன் தன் மனைவிக்கு மற்றொரு காதல் இருப்பதாக சந்தேகித்து வந்தார்.

இதனால், அவரது மனைவி ஐரினா விவாகரத்துக்கு விண்ணப்பிக்கப் போவதாகக் சொல்லி வழக்கறிஞர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டதை அறிந்த ரோமன், இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு, பால்கனியில் நின்று குதிக்கத் தயாராவது போல் புகைப்படம் எடுத்து மனைவிக்கு அனுப்பியிருக்கிறார்.

இதனால் பதறியடித்து, வாடகைக் கார் மூலம் குடியிருப்புக்கு வந்து பார்ப்பதற்குள் 9-வது மாடியில் இருந்து கீழே குதித்த ரோமனும், ஒன்றரை வயது குழந்தை ஆரோமும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகளை மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்துள்ளார்.

இருவருக்கும் இடையில், சச்சரவு ஏற்பட்டதற்கான அறிகுறியே இல்லை என்று அக்கம்பக்கத்தினரும், அவர்களது குடும்பத்தினரும் தெரிவித்த நிலையில், பழி அனைத்தும் தன் மனைவியின் மீதே என்ற ரோமன் எழுதிய கடிதம் கிடைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father suicide with his 2 children


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->