இந்தியாவை தொடர்ந்து சீன மருத்துவ கருவிகள் மீது பரபரப்பு குற்றசாட்டு வைத்த இங்கிலாந்து.!!
England speak china ventilator machine worst condition
கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை பதிவு செய்தது. இந்த வைரஸின் தாக்கத்தால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகி வருகின்றனர். பிற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வந்த காரணத்தால், மருத்துவ உபகரணத்தை சீனா மற்றும் தென்கொரிய நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
சீனாவிடம் இருந்து சுமார் 300 வெண்டிலெட்டரை இங்கிலாந்து இறக்குமதி செய்த நிலையில், மருத்துவமனையில் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்று பகீர் குற்றசாட்டை இங்கிலாந்து முன்வைத்தது. மேலும், இதனால் நோயளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அறிவித்தது.
சீன நாட்டிடம் இருந்து மருத்துவ உபகரணம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெண்டிலேட்டர் வருகையை அறிந்த இங்கிலாந்து பிரதமர் உட்பட பலரும் சீனாவிற்கு நன்றி தெரிவித்தனர். பின்னர், இதனை பயன்படுத்த துவங்கிய ஒன்பது நாட்களிலேயே தொடர் புகார் எழுந்தது. மேலும், இந்த வெண்டிலேட்டர் பெய்ஜிங் நகரின் இயன்மன்ட் கோ லிமிட் தயாரித்த ஷங்கரிலா 510 மாடல் வெண்டிலேட்டர் தரம் குறைந்து உள்ளது.
இதில் ஆக்சிஜன் வளங்கள் மற்றும் தயாரிப்பு, தரம் போன்றவை திருப்தியாக இல்லை என்றும், அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு சிக்சிஹாய் வழங்கும் அளவு செயல்பாடு இல்லை என்றும், பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது என்றும், அவசரத்திற்கு இதனை பயன்படுத்த இயலாது என்று புகார்களை கூறிக்கொண்டே செல்லலாம் என்று கூறியுள்ளனர். இது தவறான இயந்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்தின் இந்த குற்றசாட்டு சீனாவை அதிரவைத்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
England speak china ventilator machine worst condition