டுவிட்டரின் புதிய சி.இ.ஓ வை அறிவித்த எலான் மஸ்க் - யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


டுவிட்டரின் புதிய சி.இ.ஓ வை அறிவித்த எலான் மஸ்க் - யார் தெரியுமா?

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் $54.20 மதிப்புள்ள பங்குகளுடன் தோராயமாக 44 பில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார். 

அதன் பின்னர் அவர் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். முதல் கட்டமாக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரியான பாராக் அகர்வாலை பணியிலிருந்து நீக்கம் செய்தார். 

அதுமட்டுமல்லாமல், உயர் பதவியில் உள்ள பல முக்கிய தலைவர்களையும், ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார். இதனால், டுவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியாகவே இருந்தது. இந்த நிலையில் எலான் மஸ்க் டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ என்ற பெண்ணைத் தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்!  லிண்டா யாக்காரினோ முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார். 

அதே நேரத்தில் நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன். இந்த பிளாட்ஃபார்மை X ஆக மாற்ற லிண்டாவுடன் இணைந்து செயல்பட எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elon musk announce new CEO of twitter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->