மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு.!
Dubai drinkers happy with announcement
துபாய் நாட்டில் மது அருந்த இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
துபாயில் விதிக்கப்பட்ட விதிமுறையின் படி சில்லறை விற்பனை செய்யப்படும் மது கடைகளில் மது அருந்துவதற்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.
மது வாங்குவதற்கு காவல்துறையிடம் தனிநபர் அட்டை பெற்றிருக்க வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறை. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் மதுபானங்களின் மீதான வரி 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுபான விநியோகஸ்தர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சில்லறை விற்பனை மதுபான கடைகளில் மது வாங்கும் சிறப்பு அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Dubai drinkers happy with announcement