காங்கோவில் வைரச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காங்கோவில் வைர சுரங்கம் இடிந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கின்ஷசா நகரில் செயல்பட்டு வரும் வைரசுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டன.  இதையடுத்து 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பலியானவர்கள் அனைவரும் நிலத்தடி கிணறுகளில் இயங்கும் கைவினைஞர் வைரம் தோண்டுபவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diamond mine collapses in Congo


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->