துருக்கி-சிரியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது.! - Seithipunal
Seithipunal


துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவிலும், 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று 200 மணிநேரத்திற்கு பின்பும் இடிபாடுகளில் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் துருக்கியின் கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை மீட்புக் குழுவினர் 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் வீடுகளை இழந்த லட்சம் கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பல நாடுகள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் துருக்கியில் 36,187 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to 42 thousand in earthquake hits turkey sriya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->