துருக்கி-சிரியா நிலநடுக்கம்.! பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது.! - Seithipunal
Seithipunal


துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் கடந்த 6ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வீடுகளை இழந்த லட்சம் கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் துருக்கியில் 35,418 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll increased to 40 thousand in earthquake hits turkey sriya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->