கொரோனா தடுப்பூசியால் அதிகரிக்கும் மாரடைப்பு மரணம்.. அமெரிக்க மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதில் இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசியும், பெரும்பாலான மக்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய 28 நாட்களுக்குப் பின் மரணம் ஏற்பட 84 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள ஜோசப் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசியால் மாரடைப்பு தொடர்பான மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் உலக பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid vaccine increases heart attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->