கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபரை சுட்டு கொன்ற அரசு.! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில், கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதலாக பரவிய கரோனா வைரஸ் உலகம் நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்கமானது அசுர வேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது. 

தற்போதுவரை சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

சீன நாட்டினை மையமாக கொண்டு பரவிவந்த நிலையில், உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், நேற்றைய தினத்தின் நிலவரப்படி சுமார் 1,113 பேர் வைரஸ் பாதிப்பின் காரணமாக பலியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவிலிருந்து வடகொரியாவுக்கு திரும்பிய வர்த்தக அதிகாரி ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வடகொரிய அரசால் தனிமைப்படுத்தப்பட்டார். 

இந்தநிலையில், வடகொரிய அரசின் கட்டுப்பாட்டிலிருந்த கண்காணிப்பில் இருந்து அந்த நபர் வெளியேறியதாக கூறி அவரை வடகொரிய அரசு சுட்டுக்கொன்றுள்ளது. அவரை வடகொரிய அதிபர் கிம் தான் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது தெரிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தங்களின் எல்லையை முதன்முதலில் வடகொரியாதான் மூடியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona virus patient shot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->